ஓம்சு தியாகராஜன் அவர்கள் எடுத்துக்காட்டான உயர்பண்பாளர்;
ஏற்றமிகு தொழில்முனைவோர்;வள்ளன்மைப் பண்புடன் வாழ்வாங்கு வாழும் தமிழ்ப் பெருந்தகை;தமிழன் பிளவுபட்டுப் பூசல் செய்து வீழ்ச்சி காண்பதைத்
தடுத்து என்றென்றும் நலமெய்திட ஒரே வழிதான் உள்ளது.
இளையதலைமுறை நல்ல கல்விவாய்ப்புகளைப் பெற்று,மருத்துவம்,தொழில்நுட்பம்,பொறியியல்,கலையியல்கள் எனப் பல்வேறு அறிதுறைகளிலும் புலமை பெற்று,உலகளாவிய சாதனைகளைப் புரிவதே தமிழினம் தழைத்திடத் தக்கவழியாகும்.
தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும் காமராசரும் இந்த வழியைக் கொண்டுதான் இன்றைய தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார்கள்.
அந்தப் பெரியோர்கள் காட்டிய வழியில் மலேசியத் தமிழ் இளைஞர்கள்
கல்வியில் சிறந்திடும் வண்ணம் பல்வேறு தமிழ்ப்பள்ளிகளுக்கும்
பொருளுதவியை நல்கிக் கல்வி சிறந்திடத் தக்க அடித்தளம்
அமைத்துவருபவர் ஓம்சு ப.தியாகராசன் அவர்களே.
அந்தச் சான்றோரின் பெருமையை எடுத்துரைத்தலை இவ்வலைப்பூ தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
Monday, July 6, 2009
Subscribe to:
Post Comments (Atom)
பணிவான வணக்கம் ஐயா.
ReplyDeleteஎங்கள் நாட்டின் கல்வி வள்ளல் - தமிழ்ப்பள்ளிகளின் காப்பாளர் கொடைநெஞ்சர் ஓம்சு.ப.தியாகராசன் குறித்து தாங்கள் எழுதியுள்ள செய்திகளை வழிமொழிகிறேன்.
மலேசியத் தமிழர் ஒருவரைப் பற்றி தமிழக அறிஞர் தாங்கள் எழுதுவது கண்டு பெருமையடைகிறேன்.
மிக்க நன்றி.